search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாவர் மசூதி"

    சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் வாவர் மசூதிக்கு வர தடை இல்லை என்று ஜமாத் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #Sabarimala #VavarMasjid
    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு செல்லும் வழியில் எரிமேலியில் பிரசித்திப் பெற்ற நயினார் மஸ்ஜித் உள்ளது. இதனை வாவர் மசூதி என்றும் அழைப்பார்கள்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வாவர் மசூதிக்கும் சென்று வழிபட்டுச் செல்வார்கள். சபரிமலையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பேட்டை துள்ளல் நடத்துபவர்களும் வாவர் மசூதிக்கு செல்வது வழக்கம்.

    ஆண்டாண்டு காலமாக இந்த மசூதிக்கு ஆண்களும், பெண்களும் சென்று வழிபட்டு வருவது வழக்கம்.

    சபரிமலையில் தற்போது இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


    இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 9 பேர் எரிமேலி வாவர் மசூதிக்கு செல்வதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று 6 பெண்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது மதக்கலவரம் மற்றும் கலகத்தை உருவாக்க முயற்சித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே எரிமேலி வாவர் மசூதியின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. வாவர் மசூதிக்கு வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும் வருகிறார்கள்.

    இங்கு வரும் பெண்கள் உள்பட பக்தர்கள் மசூதியை வலம் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தி விட்டு சபரிமலைக்கு செல்கிறார்கள். பள்ளி வாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வர யாருக்கும் தடையில்லை.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #VavarMasjid
    சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் வன்முறை நீடித்து வரும் நிலையில், சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். #Sabarimala #VavarSwamyMosque
    பத்தனம்திட்டா:

    திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். 

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில்  வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய தமிழகத்தில் இருந்து சில பெண்கள் வருவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், 3 பெண்கள் உட்பட 5 பேரை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுசீலாதேவி, ரேவதி, காந்திமதி, திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப, கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு, வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



    இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது,

    சபரிமைலையின் புனிதம் காக்கப்பட வேண்டும். சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று வந்த நிலையில், மசூதிக்கு செல்ல பெண்களுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறீர்கள். மசூதிக்குள் பெண்ணுரிமையை நிலைநாட்ட மறுப்பது ஏன்? பினராயி விஜயினின் இரட்டை வேடம் ஏன்? இந்துக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமான இந்த நடிவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை என்றார். #Sabarimala #VavarSwamyMosque

    ×